மகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்
ஈழத்து மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்கள் நான்கினை ஈழநாதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார். மகாகவியின் மறக்கமுடியாத மேலும் நான்கு குறும்பாக்களை இங்கு பதிவிலிடுகின்றேன்:
செல்லம்மா சேலை
நல்லையர் நெக்குருகி நைந்தார்
நம் பெருமான் “வா” என்று வந்தார்
நேரே போய்த் தம் மனைவி
செல்லம்மா சேலையுள் மறைந்தார்.
சித்தன்
தென்னை மரம் ஏறுகிறான் சித்தன்
என்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்
தன்னுடையை மாற்றுகிறாள்
கிணற்றடியில் தங்கம்மாள்!
இன்னுமிறங்கானாம் அவ்வெத்தன்.
அத்தி
அத்திக்குத் தூது சென்றாள் உத்தி
முத்து இவளைக் கைப்பற்றி
முத்தி முத்தி மகிழ்ந்தான்!
மெத்தத் தித்தித்த துத்திக்கு அவ்
அத்தி செத்தாள் கத்திக் கத்தி.
வடைக்குள் வண்டு
வண்டு வடைக்குள் இருந்து மேலே
வந்தது. நான் பிய்த்தபடியாலே!
கண்டொரு சொல் பேசாமல்
காற்றில் அது போயினது
நன்றி சொல்லா தெம்மவரைப் போல.
நன்றி – http://srinoolakam.blogspot.com இணையம்