மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை (1855 – 1906)
மல்லாக விஸ்வநாதபிள்ளையின் புத்திரர். சென்னை அஞ்சல் துறையில் பெரும்பதவி வகித்தவர். “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் ஆங்கில நூலை எழுதி ஆங்கிலம் கற்ற தமிழரிடையே விழிப்புணர்வை உண்டாக்கினார். இதன் தமிழாக்கம் 1904ல் வெளிவந்தது. (நாவலர் மாநாட்டு மலர் 1969)