சாம்பிராணி தூபம்

Sharing is caring!

வீட்டில் சாம்பிராணி புகை போடும் போது 

சாம்பிராணி தூபம் போட்டு வர கண் திருஷ்டி பொறாமை தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்..

சந்தனம் கலந்து தூபம் காட்டி வந்தால் தெய்வ அருள் கிடைக்கும்…

அகில் கட்டை சேர்த்து தூபம் காட்டி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…

ஜவ்வாது கலந்து புகை போட திடிர் அதிர்ஷ்டம் வரும்…

தசாங்கம் கலந்து தூபமிட தரித்திரம் நீங்கி அதிர்ஷ்டம் ஐஸ்வர்யம் பெருகும்…

துளசி தூபமிட காரியத்தடை திருமண தடை நீங்கும்..

தூதூவளை தூபமிட என்றும் தெய்வ அருள் கிடைக்கும்…

துகிலி தூபம் காட்டி வர குழந்தைகள் நோய் இன்றி நல்ல அழகு உடன் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளும் கிடைக்கும்…

வெள்ளை குங்கிலியம் தூபமிட துஷ்ட ஆவிகள் வெளியேறும்…

வென்கடுகு தூபமிட பகை எதிர்ப்பு நீங்கும்…

கோஷ்டம் தூபமிட நவக்கிரக கோளாறு நீங்கும்…

மருதாணி தூபமிட செய்வினை கோளாறு நீங்கும் …

கரிசலாங்கண்ணி தூபமிட மகான்கள் அருள் கிடைக்கும்..

வேப்ப பட்டை தூபமிட ஏவல் பீடை நீங்கும்…

நன்னாரி வேர் தூபமிட இராஜ வசியம் கிடைக்கும்…

வெட்டி வேர் தூபமிட சகல காரியங்களும் கைகூடும்….

வேப்ப இலை தூபமிட நோய் இன்றி வாழலாம்…

அருகம்புல் தூபமிட சகல தோஷங்களும் நீங்கும்…

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com